ஒற்றை சூரியன் ஒற்றை நிலவு
என் உலகை ஆள்பவள் நீ தானே !
பித்தம் தெளிய என்னை எடுத்து -புதுப்
பிறவி தந்த நீ தாய்தானே..!
அச்சம் விலக்கி வெட்கம் தவிர்த்-துன்
திருவடி தொழுவத்தில் தவறுண்டோ ?
அன்பில் உருகி ஆயுள் உருக்கி -உன்
பூமியில் படைப்பது முறையன்றோ ?
தூரம் தொடரும் துயரம் தொடரும் -என்
துய்மை மட்டும் தொலையாது
பார்வைச் சுடரில் பயணம் மறந்-துன்
பாதை மாற முடியாது.
எங்கோ ஒரு நதி எங்கோ ஒரு துளி-யிது
எல்லாம் கடலாய் மாறாதா?
எங்கோ உன் விழி எங்கோ என் மொழி -ஒரு
இலக்கில் ஒன்று சேராதா?
Thursday, September 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment