Thursday, September 10, 2009

வெளிகளின் மனுசி

பூமிப் பந்தை
உதைத்துப் புறப்படுகிறது
அவள் கால்கள்.

சின்னஞ்சிறிய கூந்தலில்
வானவில்லை சூடிக் கொண்டிருக்கிறாள் .

தெத்தி விளையாடும் அவள் பாதங்களில்தான்
மழைத் துளிகள் உருவாகின்றன .

எப்போதேனும் வியர்வை பூத்தால்
நிலவை எடுத்து முகம் துடைத்துக் கொள்கிறாள் .

கோபம் கொள்கையில்
சூரியன் அவள் விழிகளாகிறது.

மொத்தத்தில்
வெளிகளின் மனுசி அவள்.
என் தளிர்களின் பனித்துளியில்
எப்போதும் காணக்கிடைப்பவள்.

No comments:

Post a Comment